×

2 நாள் நடக்கிறது வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை சிறப்பு முகாம்

திண்டுக்கல், நவ.24: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் வரும் நவ.25 மற்றும் நவ.26 தேதியில் நடைபெறவுள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 01.01.2024ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் கடந்த அக்.27ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், நவ.25 மற்றும் நவ.26 தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் அளிக்கலாம். எனவே, பொதுமக்கள் இச்சிறப்பு முகாமினை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024 பணிகளை தேர்தல் பார்வையாளர் வீரராகவ ராவ் நவ.25ம் தேதி ஆய்வு செய்ய உள்ளார். அன்று கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post 2 நாள் நடக்கிறது வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Roll ,Dindigul ,
× RELATED திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில்...