×

121 ஆண்டுகளில் சென்னை – புதுவை இடையே கரையை கடந்த 13வது புயல்

சென்னை: வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல், சென்னை-புதுச்சேரிக்கு இடையே மாமல்லபுரம் அருகே நேற்று இரவு முதல் கரையை கடக்க தொடங்கியது. கடந்த 121 ஆண்டுகளில் சென்னைக்கும்-புதுச்சேரிக்கும் இடையே 12 புயல்கள் இதுவரை கடந்து இருக்கின்றன. தற்போது இந்த ‘மாண்டஸ்’ புயலும், சென்னைக்கும்-புதுச்சேரிக்கும் இடையிலான பகுதிகளில் கடந்திருப்பதால், கடந்த 121 ஆண்டுகளில் 13-வது புயலாக இது பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 12 புயல்களில் 2 புயல்கள் அரபிக்கடல் வரை சென்று இருக்கின்றன. அந்த வகையில் தற்போது கரையை கடந்த மாண்டஸ் புயலும், அரபிக்கடல் பகுதிக்குதான் செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது….

The post 121 ஆண்டுகளில் சென்னை – புதுவை இடையே கரையை கடந்த 13வது புயல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,New Dhua ,Storm Mandas' ,Bengal Sea ,Mamallapuram ,Chennai-Puducherry ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை