தூத்துக்குடியில் நடமாடும் ஆவின் பால் சேவை வாகனம் துவக்கம்

தூத்துக்குடி, டிச. 3: தூத்துக்குடியில் நடமாடும் ஆவின் பால் சேவை வாகனத்தை சேர்மன் சின்னத்துரை, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் துவக்கிவைத்தனர்.

 புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், தட்டுப்பாடுகள், தடையின்றி பால் கிடைத்திட ஏதுவாகவும் நடமாடும் ஆவின் பால் வாகன சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கான நடமாடும் ஆவின் பால் வாகன சேவையை ஆவின் சேர்மன் சின்னத்துரை, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் துவக்கிவைத்தனர். இதில், பயிற்சி கலெக்டர் பிரிதிவிராஜ், ஆவின் பொதுமேலாளர் ராமசாமி, பால்வள துணைப்பதிவாளர் கணேசன், உதவி பொதுமேலாளர் சாந்தி, திட்ட மேலாளர் சாந்தகுமார் பங்கேற்றனர்.

Related Stories: