உடன்குடி, டிச. 3: உடன்குடி மேல பஜாரில் வேலாயுதம் மகன் செல்லையா, மந்திரம் மகன் கன்னிமுத்து ஆகிய இருவரும் கொல்லப்பட்டறை நடத்தி வந்தனர். கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் இருவரது பட்டறைகளும் எரிந்து நாசமாகின. இதனால் பாதிப்புக்குள்ளான இருவருக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில் ஜெ. பேரவை மாவட்டச் செயலாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் தலா ரூ.15 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார். இதேபோல் வெள்ளாளன்விளையில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பலியான சாந்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி ரூ.25 ஆயிரம் வழங்கினார்.