விவசாயி மீது தாக்குதல்

ஸ்பிக்நகர், டிச. 2:  தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்த தங்கவேல் மகன் செல்வக்குமார் (44) விவசாயியான இவர், அப்பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த சித்தரவேல் மகன் காத்தமுத்து என்பவருக்கும், இவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த காத்தமுத்து, செல்வக்குமாரை தாக்கினார். இதில் காயமடைந்த செல்வக்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: