உத்திரமேரூர், மார்ச் 20: கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இந்த சோக சம்பவத்தால், உத்திரமேரூர் அருகே பரபரப்பு ஏற்பட்டது. உத்திரமேரூர் அடுத்த ஆர்என் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். டிரைவர். இவரது மனைவி யசோதா. பெருநகர் கிராமத்தில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் வேலை செய்கிறார். இவர்களுக்கு 6 வயதில் மகளும், ஜாக்சன் கிறிஸ்டோபர் (3) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மருத்துவமனைக்கு வேலைக்கு சென்ற யசோதா, தனது 2 குழந்தைகளையும் அழைத்து சென்றார். இருவரும் மருத்துவமனையின் பின்புறம் உள்ள வயல்வெளியில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கிணற்றின் அருகே சென்றபோது சிறுவன் ஜாக்சன் கிறிஸ்டோபர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றில் விழுந்தான். இதை பார்த்த மகள், அலறி கூச்சலிட்டாள்.