காஞ்சிபுரம், மார்ச் 20: செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் உள்ள தனியார் உப்பள தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்காததால் வறுமையில் வாடுகின்றனர். உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் செல்வம் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் செல்வம் பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேட்டில் இயங்கும் பத்மா கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உப்பள தொழிலாளர்களாக 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு முறையான குறைந்தபட்ச ஊதியம் வழங்கவில்லை.