ஜெயங்கொண்டம், மார்ச் 20: ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பணிமனை கிளையில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன. மேலும் அனைத்து போக்குவரத்து மற்றும் பணிமனை தொழிலாளர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. பணியாளர்கள் பணிமனையின் உள்ளே சென்றவுடன் அனைத்து தொழிலாளர்களும் கை கழுவுவதற்கான கிருமி நாசினி நீர் அங்கு வைக்கப்பட்டு அனைவருக்கும் கை கழுவும் முறைகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு பேருந்துகளிலும் கிருமிநாசினி மருந்துகள் தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டது.