சீர்காழி, மார்ச் 20: கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கோயில் பூஜைகளை தடுக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சை பெரியகோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்களை மூட உத்தரவிட்டது, ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் பூக்குழி தள்ளி வைப்பு, கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமானில் பல ஆண்டுகளாக விமரிசையாக நடைபெற்று வரும் பாடை கட்டி மாரியம்மன் கோயில் திருவிழா தள்ளி வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து நடைபெற்று வந்த நிலையில் தீ மிதிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது என தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் காவல்துறையும், வருவாய் துறையினரும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கிறார்கள். இந்த நிலைபாடு இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பதாகும்.