கரூர், மார்ச் 20: கரூர் தாந்தோணிமலையில் உள்ள பகவதியம்மன், முத்துமாரியம்மன் கோயில் நுழைவு வாயிலில் பக்தர்கள் கைகளை கழுவும் வகையில் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து நிலையங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. முக்கிய கோயில்களும் தற்போது மூடப்பட்ட நிலையில் உள்ளன. தாந்தோணிமலையில் உள்ள பகவதியம்மன், முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 29ம்தேதி முதல் ஏப்ரல் 9ம்தேதி வரை நடைபெறவுள்ளது. மார்ச் 29ம்தேதி கம்பம் நடும் விழா நடைபெறவுள்ளது.