அருப்புக்கோட்டை, மார்ச் 20: அருப்புக்கோட்டையில் நர்ஸ் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை-மதுரை ரோடு ராஜீவ்நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி ராமலட்சுமி(50). அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி, அருகில் சாவியை ஒளித்து வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், சாவியை எடுத்து கதவை திறந்து, பீரோவில் இருந்த 50 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு சென்றனர்.