சாத்தூர், மார்ச் 20: சட்டவிரோதமாக மது, புகையிலை விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். சாத்தூர் அருகே ஊமத்தன்பட்டி கிராமத்தின் பஸ் ஸ்டாப் பின்புறம் வைத்து மதுவிற்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடுத்திற்கு சென்ற சாத்தூர் தாலுகா போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த சிங்கராஜ்(39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.