தொண்டி, மார்ச் 20: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொண்டியில் 25 நாள்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு கொரோனா பாதிப்பு எதிரொலியாக தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், கைவிடக் கோரியும் கடந்த 25 நாட்களாக தொண்டியில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.