பட்டிவீரன்பட்டி, மார்ச் 20: பட்டிவீரன்பட்டியில் காளியம்மன் பகவதியம்மன் கோயிலில் 29வது ஆண்டு பங்குனி திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 3ம் தேதி சாமி சாட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து 17ம் தேதி எல்லை காவல்காரன் சாமி கோயிலிலிருந்து காளியம்மன் பகவதியம்மனை கோயிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும், 18ம் தேதி மாவிளக்கு அக்கினிசட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.