கெங்கவல்லி, மார்ச் 20: வீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை செயல் அலுவலர்கள் வழங்கினர். கெங்கவல்லி தாலுகாவில் வீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் நிலையம், வங்கிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடாஜலம் மற்றும் தூய்மை பணியாளர்கள் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகித்தனர்.