திருச்செங்கோடு, மார்ச் 20: திருச்செங்கோடு அருகேயுள்ள பால்மடை பிஆர்டி நிறுவன வளாகத்தில், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பிஆர்டி நிறுவனங்களின் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். மேலாண் இயக்குனர் பரந்தாமன் முன்னிலை வகித்தார். நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை தலைவர் சேன்யோ குமார் வரவேற்றார். அரசு மருத்துவமனை டாக்டர் ராஜ்குமார், கொரோனா பரவும் விதம், அதனை தடுக்கும் வழிகள் குறித்து பணியாளர்களுக்கு விளக்கினார்.