கிருஷ்ணகிரி, மார்ச் 20: கிருஷ்ணகிரியில் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பாபாமாதையன், சலீம்பாஷா, முத்து, ரஜினிசங்கர், நாகராஜ், சாதிக்பாஷா, கோவிந்தராஜ், சுபலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசினார். கூட்டத்தில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.