தேன்கனிக்கோட்டை, மார்ச் 20: கொரோனா வைரசை தடுக்கும் வகையில் மாநில எல்லைகளில் சுகாதார கண்காணிப்பை பலபடுத்தவும், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க வேண்டியும் திமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். கொரோனா வைரசை தடுப்பதற்கு மாநில எல்லைகளில் சுகாதார கண்காணிப்பை பலப்படுத்தி, ஓசூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் தளி பிரகாஷ், வேப்பனஹள்ளி முருகன், ஓசூர் சத்யா ஆகியோர் சட்டமன்றத்தில் நேற்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி மற்றும் வேப்பனஹள்ளி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கர்நாடக மாநிலத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது.