கிருஷ்ணகிரி, மார்ச் 20: பர்கூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சேலம் வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பர்கூர் பகுதியில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் அன்னதானப்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த ராமு மகன் தன்ராஜ்(34) என்பவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில், அவர் தொடர்ந்து வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதுடன் பர்கூர், கல்லாவி மற்றும் தர்மபுரி ஆகிய காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.