கிருஷ்ணகிரி, மார்ச் 20: கிருஷ்ணகிரி பழையபேட்டை பூக்கார தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 5வயதில் அக்ஷயா என்ற குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக குழந்தை அக்ஷயா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு வழக்கம்போல் அனைவரும் தூங்கச் சென்றனர். மறுநாள் காலை வெகுநேரமாகியும் சத்யா எழுந்திருக்கவில்லை.