தஞ்சை, மார்ச் 19: கும்பகோணத்தை சேர்ந்த வாலிபரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். கும்பகோணம் வட்டம் தாராசுரம் எலுமிச்சங்காபாளையம் கதர் காலனியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் அருண்குமார் (எ) அருண் (28). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் எஸ்பி மகேஸ்வரன் பரிந்துரையின்பேரில் கும்பகோணம் தாலுகா வட்ட காவல் ஆய்வாளர் கருணாகரன் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர ஆவணங்களின் பேரில் அருண்குமாரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து அருண்குமார், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.