கரூர், மார்ச் 19: கரூர் மாவட்டத்தில் தடையை மீறி ஆற்றில் மணல் அள்ளுவது மீண்டும் தொடர்கிறது. கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றுப் பகுதிகளில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மணல் திருட்டு நடவடிக்கை மேற்கொள்ளாததால் மீண்டும் ஆறுகளில் மணல் எடுக்கின்றனர். உள்ளூர் தேவைக்காக மணல் எடுத்துச் செல்லலாம் என மாட்டு வண்டிகளுக்கு வாய்மொழி உத்தரவினை அதிகாரிகள் வழங்கியிருப்பதாக தெரிகிறது. எனினும் பொதுப்பணித்துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமல் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் மணல் எடுத்துச் செல்கின்றனர். ஒரு லோடு வண்டி மணல் ரூ.900 முதல் ரூ.2,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் தேவைக்கு எனக்கூறி சிலர் லாரிகளுக்கு மணலை ஏற்றி விடுகின்றனர்.