மணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்

செய்யாறு, மார்ச் 19: செய்யாறு போலீஸ் டிஎஸ்பி சுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை காழியூர் செய்யாற்றுப்படுகை அருகே ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக செய்யாறு வேல்சோமசுந்தரம் தெருவை சேர்ந்த ஏழுமலை(49) என்பவரை கைது செய்தனர். மேலும், மணலுடன் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், செய்யாற்றுப்படுகையில் இருந்து மணல் ஏற்றிவந்த 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: