வைகுண்டம், மார்ச் 19: நவதிருப்பதிகளில் 3வது திருப்பதியான திருப்புளியங்குடி காய்சினி வேந்தப்பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (18ம் தேதி) துவங்கியது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் 3வது திருப்பதியான திருப்புளியங்குடி காய்சினி வேந்தப்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவத் திருவிழா வெகு விமரிசையாக 10 நாட்கள் நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (18ம் தேதி) துவங்கியது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு கொடிபட்டத்தை பக்தர்கள் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோயிலை வந்தடைந்ததும் கொடிமரம் முன் உற்சவர் காய்சினி வேந்தப்பெருமாள் எழுந்தருளினார். காலை 9.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர்.