ராஜபாளையம், மார்ச் 19: ராஜபாளையம் அருகே உள்ள வரகுணரமபுரத்தை சேர்ந்தவர் மலைச்சாமி மனைவி நாகம்மாள்(65). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்பொழுது நல்லபாம்பு கடித்துவிட்டது. உடனடியாக அருகில் வேலை பார்த்தவர்கள் பாம்பை பிடித்து ஒரு பையில் போட்டுக்கொண்டு நாகம்மாளை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மதியம் 2 மணியளவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த சமயத்தில் செவிலியர்கள் மட்டுமே முதலுதவி செய்து சிகிச்சை அளித்தனர். மாலை 5 மணியளவில் வந்த டாக்டர், நாகம்மாளை சோதித்துவிட்டு உயிரிழந்துவிட்டார் என கூறியுள்ளார்.