வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, மார்ச் 19: ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். இதைக் கண்டித்து, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் முத்துஅமுதநாதன் தலைமை வகித்தார். இதில் கலந்து ெகாண்ட ஏராளமான வக்கீல்கள், ரஞ்ஜன் கோகாய் நியமனத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

Related Stories: