சேலம், மார்ச் 19:சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கும், களங்காணி ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று காலை, சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், தண்டவாளத்தில் சடலமாக கிடப்பதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தனர். அதில், தண்டவாளத்தில் சடலம் ஏதும் இல்லை. ஆனால், ரத்தம் படிந்து கிடந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.