ராசிபுரம், மார்ச் 19: ராசிபுரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி பங்கேற்று, கொரோனா வைரஸ் பரவும் விதம், தற்காப்பு முறைகள், சுவாச சுகாதாரம், கை சுகாதாரம், கை கழுவும் செயல்விளக்க முறைகள் போன்றவற்றை துப்புரவு பணியாளர்களுக்கு விளக்கினார். இதல் நகராட்சி துப்புரவு அலுவலர் பாலகுமார ராஜூ, துப்புரவு ஆய்வாளர் பாஸ்கரன், மேற்பார்வையாளர் முத்தமிழ்செல்வன், ராஜேந்திரன், சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.