(தி.மலை) அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

செய்யாறு, மார்ச் 18: செய்யாறு அடுத்த மாமண்டூர் கிராமம் சேனியநல்லூர் சாலையில் உள்ள ஏரிக்கால்வாயில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் நேற்று முன்தினம் பார்த்தனர்.

இதுகுறித்து, விஏஓ அரிக்கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார், ெகாலை செய்யப்பட்டு சடலத்தை வீசிவிட்டு சென்றார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: