பின்னலூர் கிராமத்தில் நாளை மனுநீதி நாள் முகாம்

சேத்தியாத்தோப்பு, பிப். 26: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமத்தில் நாளை (27ம் தேதி) அரசு மனு நீதி நாள் முகாம் நடைபெறுகிறது. இந்த மனுநீதிநாள் முகாமில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பொதுமக்களிடமிருந்து மனுக்களும் பெறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான இடம் மற்றும் ஏற்பாடுகள் குறித்து புவனகிரி வட்டாட்சியர் சுமதி மற்றும்  அதிகாரிகள் நேரில்  ஆய்வு செய்தனர். அப்போது முகாமிற்கு வருகின்ற பொதுமக்கள், நலத்திட்ட உதவிகள்பெறும் பயனாளிகள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் வரவேற்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆய்வின்போது சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் பரிமளம், சமூக பாதுகாப்பு திட்டம் வட்டாட்சியர் சிவக்குமார், பின்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபுதாஸ், சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் செல்வலட்சுமி, பின்னலூர் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: