ஜி.கே. மெட்ரிக் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

காட்டுமன்னார்கோவில், பிப். 26:  காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. ஜி.கே. கல்விக்குழுமத்தின் தலைவரும் தாளாளருமான குமாரராஜா தலைமை தாங்கினார். ஜி.கே. கல்விக்குழுமத்தின் மேலாண் இயக்குநர் ஜி.கே. அருண் முன்னிலை வகித்தார். பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் காலை இறைவணக்க கூட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு சார்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் பள்ளி இயக்குநர் ஜி.கே. அகிலன் மற்றும் பள்ளி முதல்வர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: