நெய்வேலி, பிப். 26: நெய்வேலியில் சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள், பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நெய்வேலி அடுத்த கீழூர் ஊராட்சி பாச்சாரபாளையம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த புகழ்பெற்ற பாசன சோழன் ஏரியை என்எல்சி நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை கடந்த மாதம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தலைமையில் துவக்கி வைத்தனர். இந்நிலையில் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள், விரிவாக்க பணிகள், மதகுகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து என்எல்சி இந்தியா அதிகாரிகள், பொதுப்பணித்துறை, மின்துறை, உள்ளாட்சி துறை, ஓஎன்ஜிசி, வருவாய் துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுடன் சோழன் ஏரியில் சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.