பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

ரிஷிவந்தியம், பிப். 26:  ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள 103 அரசு பள்ளிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியாக ஏற்க வேண்டுமென ரிஷிவந்தியம் வட்டார கல்வி அலுவலர்கள் கென்னடி, அண்ணாதுரை ஆகியோர் குறுஞ்செய்தியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியிருந்தனர். அதன்படி ரிஷிவந்தியம் அடுத்த சேரந்தாங்கல் பள்ளியில் தலைமையாசிரியர் பழனிசாமி தலைமையிலும், கீழ்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ஞான சத்தியமூர்த்தி தலைமையிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆசிரியர்கள் மகேந்திரா, இளையராஜா, ரவிக்குமார், மணிமேகலை, ஜெசிமா பர்வீன், சுகன்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோன்று பெரியகொள்ளியூர் பள்ளியில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் பாஸ்கரன் தலைமையிலும், சின்னமணியந்தல் பள்ளியில் ஷேக் சாகிர் உசேன் தலைமையிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

Related Stories: