திருக்கனூர் அருகே தூக்குபோட்டு வாலிபர் சாவு

திருக்கனூர், பிப். 26: திருக்கனூர் அருகே சோரப்பட்டு டிவி சென்டர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கலைச்செல்வன் (28). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். கடந்த 1ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த இவர் சம்பவத்தன்று மது அருந்தியுள்ளார். இதனால் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தாயாரின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவல் அறிந்த திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கலைச்செல்வனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது உறவினர்காரைக்கால், பிப். 26: காரைக்காலில் கார், ஆட்டோ மோதி கொண்ட விபத்தில், தமிழக போலீசார் மற்றும் மாவட்ட பாஜக பிரமுகர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

காரைக்கால் திரவுபதியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பாஜக பிரமுகர் மணிகண்டன்(35) என்பவர் சம்பவத்தன்று செல்பேசியில் பேசிக்கொண்டு காரை ஓட்டிச் சென்றபோது, காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தை சேர்ந்த தமிழக காவல்துறையை சேர்ந்த தேவேந்திரன்(36) என்பவர் குடும்பத்தோடு ஆட்டோவில் சென்றபோது, காரும், ஆட்டோவும் மோதிக்கொண்டது. தொடர்ந்து, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, தேவேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது, மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக், சதீஷ் ஆகியோர் தேவேந்திரன், அவரது தம்பி ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, தேவேந்திரன் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், சதீஷ் ஆகியோரை கைது செய்து, காரைக்கால் சார்பு கோட்ட நீதிபதி ஆதர்ஷ் முன் ஆஜர்படுத்தினர். தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகின்றனர். தங்கராசு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: