நாகர்கோவில், பிப்.26: நாகர்கோவிலில் வாலிபரிடம் செயின் பறித்து விட்டு தப்பிய வழக்கில் கைதான 2 பேர் மீது ஏற்கனவே கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் கடந்த 21ம் ேததி இரவு தனியாக நடந்து வந்த தெங்கம்புதூரை சேர்ந்த புவனேஸ்வரன் என்ற வாலிபரை பைக்கில் வந்த 2 பேர் லிப்ட் தருவதாக அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த ஒன்றேகால் பவுன் செயினை பறித்து சென்று விட்டனர். மேலும் இதனை தடுக்க வந்த நாகர்கோவில் செட்டிக்குளம், கணபதிநகர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற வாலிபரையும் கத்தியால் குத்தினர். இது தொடர்பாக இருவரும் அளித்த புகாரின் பேரில் போலீசார் தனித்தனி வழக்குகள் பதிவு செய்தனர். இது தொடர்பாக தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்தது.