காந்திதாம் எக்ஸ்பிரஸ் தாமதமாக ஓடும்

நாகர்கோவில், பிப்.26:  தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பு:வைக்கம் ரோடு - பிறவம் ரோடு ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெற இருப்பதால் இவ்வழித்தடத்தில் பிப்ரவரி 29, மார்ச் 1 ஆகிய தேதிகளில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில் எண் 16335 காந்திதாம்  நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் பிறவம் ரோடு ரயில் நிலையத்தில் வரும் 29ம் தேதி நிறுத்தி விடப்படும். இதன் காரணமாக இந்த ரயில் 35 நிமிடங்கள் தாமதமாக பிறவம் ரோடு- வைக்கம் ரோடு இடையே இயக்கப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: