கும்பகோணம், பிப். 25: கும்பகோணம் ஏஆர்ஆர் கல்வி குழுமத்தில் பயிலும் 9, 10ம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேர்வை கொண்டாடுவோம் எனும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமலிங்கம் கலையரங்கில் நடந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் குத்துவிளக்கேற்றி விழா துவங்கியது.ஏ,ஆர்ஆர் கல்வி குழும தாளாளர் டாக்டர் சுப்ரமணியம், செயலாளர் வைத்தியநாதன், அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் சுகமாலா வைத்தியநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக யதார்த்த ஜோதிடர் ஷெல் வீதா மோதர் பங்கேற்று மாணவர்களுக்கு தேர்வை பற்றிய விளக்கங்களை அளித்தார்.