கும்பகோணம், பிப். 25: கும்பகோணம் அடுத்த உடையாளூரில் ராஜராஜசோழன் சமாதி என்றழைக்கப்படும் சிவலிங்கத்துக்கு சதய நட்சத்திரத்தை முன்னிட்டு இந்து தமிழர் கட்சி சார்பில் நெற்கதிர்கள் மற்றும் நெல்மணிகளை கொண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம்ரவிக்குமார் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அப்போது விவசாயம் செழிக்க வேண்டும். நெல்லுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென நெற்கதிர்கள் மற்றும் நெல்மணிகளை கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.மாநில செயற்குழு உறுப்பினர் பரணிதரன், மாவட்ட நிர்வாகி சிவா,ராமமூர்த்தி, ராஜராஜசோழன் பக்தர்கள் பேரவை நிர்வாகி பாலு உடனிருந்தனர்.