திருத்துறைப்பூண்டியில் போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

திருத்துறைப்பூண்டி, பிப்.25: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் அங்காள பரமேஸ்வரி கோயில் வளாகம் அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி திருத்துறைப்பூண்டி காவல்துறை சார்பில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன். எஸ்.ஜ ரூபாவதி மற்றும் பொதுமக்கள், போலீஸ் சார் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் பேசுகையில், பொதுமக்கள் எந்தவித புகார் சம்பந்தமான மனுக்களையும் தயங்காம், எந்தவித பயமும் இன்று காவல் நிலையத்தில் வந்து கொடுக்கலாம். போலீசார் அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல் பொதுமக்களும் விசாரணை சம்பந்தமாக புகார் வந்தால் விசாரிக்கும் போது, போலீசாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

Related Stories: