கல்லூரிக்கு செல்லாததால் தாய் கண்டிப்பு விஷமருந்திய மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு

வலங்கைமான், பிப்.25: வலங்கைமான் அடுத்த நார்த்தாங்குடி பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த நார்த்தாங்குடி பெரிய தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் திவாகரன்(19). அவன் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். திவாகன் கல்லூரிக்கு முறையாக செல்லாமல் இருந்து வந்ததால் அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த திவாகரன் கடந்த 19ம் தேதி காலை வீட்டில் இருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு மயக்கமடைந்தார். அவரை உடனே நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை திவாகரன் இறந்து விட்டான். இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: