பாடாலூர் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 8 பவுன், ரூ.1.55 லட்சம் கொள்ளை

பாடாலூர், பிப். 25: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து எட்டரை பவுன் நகை மற்றும் ரூ.1.55 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் மணிகண்டன் (44)ய இவர் இரூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இவரது மனைவி சமயபுரம் கோயிலுக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த மூன்றரை பவுன் நகைகள், ரூ.1.35 லட்சம் பணம்

ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் மகன் மணிவேல் (38). இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் இவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இருவரும் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து இருவரும் தனித்தனியே பாடாலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: