வேதாரண்யம், பிப். 25: வேதாரண்யத்தில் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ படம் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளரும், நாகை மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவருமான கிரிதரன், நகர செயலாளர் எழிலரசு, மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், நாகை மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் அம்பிகாதாஸ், அதிமுக பிரமுகர் அன்பழகன், மாரியப்பன், இலக்குவன், முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன், வழக்கறிஞர் நமச்சிவாயம், ஓய்வுபெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜரெத்தினம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குஞ்சாலி மரைக்காயர், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் பாபு, ஆசிரியர் கருணாநிதி, நகரஅவைத்தலைவர் பழனிவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவானந்தம் மற்றும் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.