வேதாரண்யம், பிப். 25: வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி வடக்கில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு ஊராட்சி கழக தலைவர் தசமணி தலைமை வகித்தார். பொன்னம்பலவாணன் வரவேற்றார். கட்சியில் இணைந்தவர்களுக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிஞர் மாசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைக்கோவன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.