கொள்ளிடம், பிப். 25: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருக்கருக்காவூர் கிராமத்திலிருந்து கிளாத்தோப்புக்கு செல்லும் 2 கிலோ மீட்டர் தூர தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கிராமச் சாலைகளை மேம்படுத்தும் பணியை முறையாக செயல்படுத்த வேண்டும். சாலை தரமற்றதாக இருந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.