கோவில்பட்டி பள்ளியில் மேற்படிப்பு வழிகாட்டி வகுப்பு

கோவில்பட்டி, பிப். 25: கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 மாணவர்களுக்கான வேலைவாய்ப்பிற்குரிய மேற்படிப்புகளை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டி வகுப்பு நடந்தது. கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிச்செல்வம் தலைமை வகித்தார். தி என்ட்ரன்ஸ் கேட் தலைமை நிர்வாக அலுவலர் அஸ்வின், அனைத்து வகையான மேற்படிப்புகளுக்கான வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள் குறித்து பேசினார். பள்ளி செயலாளர் செந்தில்கனிராஜா, பொருளாளர் செல்வம், நிர்வாக குழு உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, ரவிமாணிக்கம், சாமிராஜன், நீதிராஜன், வள்ளுவன், கண்ணன், செல்வராஜ், பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Related Stories: