ஜெயலலிதா பிறந்த நாள் உற்சாக கொண்டாட்டம்

தூத்துக்குடி, பிப். 25: தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் எஸ்பி.சண்முகநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தூத்துக்குடி டூவிபுரம் 7வது தெருவில் உள்ள மாவட்ட  அலுவலகம் முன்பு ஜெயலலிதா படத்திற்கு  அதிமுகவினர் ஏராளமானோர் மாலை அணிவித்தும், மலர்தூவியும், பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாநில அமைப்புசாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட பஞ். துணை தலைவர்  செல்வக்குமார்,  முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை,  பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன்,  பொன்ராஜ்,  மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, இலக்கிய அணி செயலாளர் நடராஜன், விவசாய சங்க தலைவர்  குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சத்யா லட்சுமணன், எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் வீரபாகு, பேச்சாளர் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி வக்கீல் முனியசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் தனராஜ், மகளிரணி செரினா பாக்கியராஜ், நகர்மன்ற முன்னாள் தலைவர் மனோஜ்குமார், பாசறை இணை செயலாளர் காசிராஜன், மாநகர மேற்கு பகுதி அவைத்தலைவர் சந்தனம், இளைஞரணி அருண் ஜெபக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் சுடலைமணி, முபாரக்ஜான், முத்துமதி தமிழரசி, சந்தனப்பட்டு, கமலக்கண்ணன், ஆனந்தகுமார், ஆத்திக்கண், கோகிலா, செல்லப்பா, வட்ட  செயலாளர்கள் முருகன், சகாயராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு மைதீன், நாகூர்பிச்சை, பிரபாகர், வலசை வெயிலுமுத்து, பிராங்க்ளின் ஜோஸ், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணையா, பிரபாகரன், கேஏபி.ராதா, நிர்வாகிகள் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏரல் பேரூராட்சி அருகே அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ தலைமை வகித்து ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப் அருகில் அதிமுக கொடியேற்றினார்.

நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஆத்திப்பழம் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் அழகேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், ஏரல் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் அசேக்குமார் மற்றும் நிர்வாகிகள் ரத்தினசபாபதி, ராஜா, பாலமகராஜன், ரமேஷ், சேர்மன், இசக்கியப்பன், அய்யாப்பிள்ளை, ஜெகன்ராஜ், கண்ணன், முத்துக்குமார், முருகன், மகேந்திரன், நெல்லையப்பன், மகளிரணி சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறுத்தொண்டநல்லூரில் ஜெயலலிதா படத்திற்கு சண்முகநாதன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அதிமுக கொடியேற்றினார். பஞ். முன்னாள் தலைவர் தசரதபாண்டியன் இனிப்பு வழங்கினார். இதில் பஞ். தலைவர் ஜெயந்தி தசரதபாண்டியன், ஊராட்சி செயலாளர் சித்திரை, கிளை செயலாளர் முத்துமாலை, சூழவாய்க்கால் செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் முருகன், சூசையப்பன், ராமர், வை. யூனியன் கவுன்சிலர் சோமசுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.பெருங்குளத்தில் நடந்த விழாவிற்கு நகர செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்து இனிப்பு வழங்கினார். ஒன்றிய இளைஞரணி அய்யாக்குட்டி, இளைஞர் பாசறை செயலாளர் தங்கப்பாண்டி மற்றும் செல்லப்பா, ராமசாமி, மாரிமுத்து, கண்ணன், அப்பாவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: