கண்ணாடி மாளிகையில் பால்சம் மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்து

ஊட்டி, பிப். 25: மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கும் பால்சம் மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்கின்றனர். தற்போது மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா முழுவதிலும் மலர் நாற்றுக்கள் நடவு செய்து, அதை பராமரிக்கும் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காவில் மலர்கள் இன்றி சிறு சிறு செடிகள் மட்டுமே காணப்படுகிறது.

ஆர்வத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் இல்லாத பூங்காவை பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர். இதனால், ஆண்டு தோறும் வளரும் பால்சம் மலர் தொட்டிகளை கண்ணாடி மாளிகையில் உள்ள அலங்கார மாடத்தில் வைத்துள்ளது. இந்த மலர்களே கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரகத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளது. பூங்காவில் மலர்களை காண முடியாத சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசிப்பது மட்டுமின்றி, அதன் அருகே நின்ற புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அடுத்த மாதம் சீசன் துவங்கும் நிலையில், பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளையும் பாதுகாக்கும் பணியிலும், பராமரிக்கும் பணியிலும் பூங்கா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Related Stories: