ஈரோடு, பிப். 25: ஈரோடு வேப்பம் பாளையத்தில் உள்ள தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மசி கல்லூரியில் ஈரோ ஜாப்ஸ் சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான மாணவர்களை தேர்வு செய்தனர். இம்முகாமில் பல்வேறு ஊர்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெற்றனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தலைவர் பரமசிவம், செயலாளர் மற்றும் தாளாளர் நடராஜன், பொருளாளர் குழந்தைசாமி, அறக்கட்டளை உறுப்பினர் முருகபூபதி, முதல்வர் கணேசன், ஒருங்கிணைப்பாளர்கள் முத்துக்குமார், மோகன்ராஜ், ராயல்பிராங்க் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் செய்திருந்தனர்.