குறைதீர்க்கும் கூட்டத்தில் 263 மனுக்கள் பெறப்பட்டன

ஈரோடு, பிப். 25:  கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் 263 மனுக்கள் பெறப்பட்டன. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர், தொழில் கடன், கல்விக்கடன், காவல்துறை நடவடிக்கை, இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 263 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.  இக்கூட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, மாற்றுத்திறனாளிளுக்கு இலவச 3 சக்கர சைக்கிள் என மொத்தம் ரூ.22 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Related Stories: