பெரியக்கோட்டையில் கிராம சாலையில் பயிர்களை உலா்த்தும் விவசாயிகள்

கந்தவகோட்டை, பிப்.25: கந்தவகோட்டை அருகே பெரியக்கோட்டை கிராமத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்தப் பொருட்களை உலா்களங்கள் அமைக்கப்படாத காரணத்தினால் கிராம சாலைகளில் உலா்த்துகின்றனா். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.ஏற்கனவே கிராம சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம்பட்டு வரும் நிலையில் உலா்களங்கள் அமைக்கப்படாத காரணத்தினால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை சாலையில் உலா்த்த வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் சாலை விபத்துகளில் சிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.எனவே ஊராட்சிகளில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைப்பொருட்களை உலா்த்த உலா்களங்கள் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: